விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பாண்டியன் நகரில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களது மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் மகன் சுப்புராஜுக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தனது மகனை நினைத்து சண்முகத்தாய் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சண்முகத்தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகத்தாயின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.