சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் சைதன்யா நகரில் அருள் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிஷ்(6), பிரனாவ்(3) ஆகிய 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் ஹரிஷ் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் பாட்டி அனுராதா வீட்டில் வசித்து வருகிறான். நேற்று முன்தினம் ஆலத்தூர் பகுதியில் இருக்கும் கிருஷ்ணா கால்வாயில் அருள்பாண்டி தனது மனைவி மற்றும் குழந்தையுடன் குளிக்க சென்றுள்ளார். முதலில் பிரனாவை குளிப்பாட்டி கரைமேல் உட்கார வைத்துவிட்டு கணவன் மனைவி இருவரும் கால்வாயில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பிரனாவ் கால்வாயில் இறங்கியதால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அருள் பாண்டி தனது குழந்தையை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் பிரனாவ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.