கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்கல் பூண்டியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பெரியசாமி ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பெரியசாமி கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெரியசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.