சென்னை மாவட்டத்தில் உள்ள பபுழல் கதிர்வேடு சத்தியமூர்த்தி நகரில் தனியார் நிறுவனம் மூலம் நான்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 30-ஆம் தேதி திருவண்ணாமலையை சேர்ந்த தேவராஜ் என்பவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மூன்றாவது மாடியில் இருந்து தேவராஜ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.