கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காஞ்சாம்புரம் பகுதியில் பாலஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜெய்சிங்(27) சமையல் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஜெய்சிங் அப்பகுதியில் இருக்கும் நண்பரின் திருமண வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

அப்போது அப்பகுதியில் இருக்கும் குட்டையில் ஜெய்சிங் சடலமாக கிடந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் அருகே இருந்த வயல் பகுதியில் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெய்சிங்கின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜெய்சிங் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.