ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுக்காடு பகுதிக்கு செல்லும் சாலையில் ஒரு குடியிருப்பு அமைந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் மர்மமான முறையில் பெண் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட பெண் அந்தியூர் சத்யா நகரை சேர்ந்த செந்தில் குமாரின் மனைவி செல்வி என்பது தெரியவந்தது.

அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. மது போதையில் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே செல்லும் செல்வி மீண்டும் தானாக வீட்டிற்கு வந்து விடுவார். ஆனால் கடந்த 27-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றனர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அதன் பிறகு செல்வி சடலமாக மீட்கப்பட்டார். எனவே அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் செல்வி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.