கரூர் மாவட்டத்தில் உள்ள பணிக்கம்பட்டி பகுதியில் கேசவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணசீலா என்ற மனைவி உள்ளார். கடந்த 20-ஆம் தேதி கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே சென்ற குணசீலா மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனையடுத்து கேசவராஜ் தன்னந்த மனைவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து கேசவராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குணசீலாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.