கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மேலராமன் புதூர் எம்.ஜி.ஆர் சிலை அருகே இருக்கும் பகுதியில் ஸ்டீபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது மனைவி நாகர்கோவிலில் இருக்கும் ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 13 மற்றும் 10 வயதில் இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகன் ஸ்டெபின் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற எட்டாம் வகுப்பு சொல்லவிருந்தான்.

நேற்று காலை பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு சிறுவர்கள் மட்டும் வீட்டில் இருந்தனர். மாலை நேரத்தில் ஸ்டெபினின் தம்பி சிறுவர்களுடன் சேர்ந்து விளையாட சென்று விட்டான். இதனையடுத்து இரவு வீட்டிற்கு திரும்பி வந்த பெற்றோர் ஸ்டெபின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஸ்டெபின் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.