புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராஜகோபாலபுரம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியின் தம்பி சரவணகுமாரும்(19) பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் சரவணகுமார் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு உறவினர்களிடம் கூறி வந்துள்ளார். உறவினர்களும் அவருக்கு பெண் பார்த்து வந்தனர். இன்னும் தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சரவணகுமார் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சரவணக்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சரவணகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.