கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மூங்கில்புதூர் பகுதியில் கனிமவள உதவி இயக்குனர் அஸ்வினி தலைமையில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்ததில் கிரானைட் கற்களை அனுமதியின்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அதிகாரி அஸ்வினி கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் லாரியை பர்முதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.