விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாரணாபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் முத்தமிழ் காலணியில் வசிக்கும் செல்வம் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை செய்த போது அனுமதி இல்லாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் செல்வத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.