திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுப்பையா புரத்தில் காந்திமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் காந்திமதி தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் குடிபோதையில் காந்திமதியை கிண்டல் செய்துள்ளார்.

இதனை காந்திமதி தட்டி கேட்டதால் கோபமடைந்த முருகன் காந்திமதியை தகாத வார்த்தைகளால் பேசி அவரது கையை கடித்ததாக தெரிகிறது. இதனால் காயமடைந்த காந்திமதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.