சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி நம்பி நகரில் ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடைகளுக்கு ஐஸ்கட்டி போடும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ஹேமாவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜிக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டின் 2-வது மாடியில் ராஜி படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் காலை ரத்த வெள்ளத்தில் ராஜி கீழே விழுந்து இறந்து கிடப்பதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ராஜி மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.