கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதேபள்ளியில் முன்னாள் ராணுவ வீரரான ராஜப்பன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த 1- ஆம் தேதி கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு காஞ்சிபுரம் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு நேற்று முடிந்த நேரம் மீண்டும் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ராஜப்பன் அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகை, 3 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராஜப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.