தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 30ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜா மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

அதன் பிறகு அந்த பகுதியில் இருக்கும் வரட்டாறு கால்வாய் பகுதியில் ராஜா சடலமாக கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.