தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 27-ஆம் தேதி சிறுமி இரவு தனது குடும்பத்தினருடன் படுத்து தூங்கியுள்ளார். நள்ளிரவு 2 மணிக்கு சிறுமியின் தாய் எழுந்து பார்த்தபோது தனது மகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக தனது மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். ஆனாலும் சிறுமியை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வருகின்றனர்.