தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எட்டி மரத்துப்பட்டி பகுதியில் நரசிம்மன் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் அந்த பகுதியில் 15 ஏக்கர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். நரசிம்மனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது நேற்று மதியம் நரசிம்மன் மது குடித்துவிட்டு நடந்து சென்றுள்ளார். அப்போது நிலைத்தடுமாறி கிணற்றில் விழுந்து தத்தளித்தார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த நரசிம்மனின் மனைவி ராணி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றில் இறந்து கிடந்த நரசிம்மனை மீட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.