கடலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி மாரியம்மன் கோவில் 11-வது வார்டில் பெயிண்டரான ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அபிராமி அருகில் இருக்கும் தனது சித்தி முத்தாள் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த 30-ஆம் தேதி ஜெகன் தனது மனைவியை அழைத்து வருவதற்காக சென்றார்.

ஆனால் அபிராமி ஜெகனுடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் கோபமடைந்த ஜெகன் தகாத வார்த்தையால் தனது மனைவியை திட்டி கூரை வீட்டிற்கு தீ வைத்துள்ளார். இதனால் வீட்டில் பகுதி அளவு எரிந்து சாம்பலானது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜெகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.