கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பூண்டி கிராமத்தில் கல்யாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் பெரியசாமி மற்றும் மகள் இருவரும் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இதனால் கல்யாணி தனது தாய் மற்றும் மருமகளுடன் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மர்ம நபர் கல்யாணியின் தாயிடம் ஏதாவது வேலை இருக்கிறதா? என கேட்டார்.

அதற்கு வீட்டில் யாரும் இல்லை. பிறகு வந்து பாருங்கள் என கல்யாணியின் தாய் கூறினார். இதனையடுத்து மூதாட்டிக்கு தெரியாமல் மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்து 12000 ரூபாய் பணம் 3 பவுன் தங்க நகை உள்ளவற்றை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.