கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கானங்காடு கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் ராமஜெயம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடகிருஷ்ணன்(24) என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ராமஜெயத்திற்கும் வேறொரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ள காதலாக மாறியது. இதனை அறிந்த வெங்கட கிருஷ்ணன் தனது தந்தையை கண்டித்தார்.

இதனால் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த ராமஜெயம் தனது மகனை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த வெங்கடகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராமஜெயத்தை கைது செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.