விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அன்னை தெரசா நகரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏனாதிமங்கலம் கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 20-ஆம் தேதி குமார் தனது மனைவியுடன் சென்னையில் இருக்கும் மகளை பார்க்க சென்றார். இதனையடுத்து மாலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்து அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகை, 11 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து குமார் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.