திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நாவலூர் ஏரியில் வாலிபரின் உடல் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த வாலிபரின் தலையில் தொழிற்சாலை பணியில் ஈடுபடும்போது பாதுகாப்புக்காக அணியும் ஹெல்மெட் இருந்தது.

அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. ஆனாலும் அவர் வட மாநில தொழிலாளியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? யாராவது வாலிபரை அடித்து கொலை செய்தார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.