தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இருளப்பட்டி இந்திரா நகரில் மாது என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது இளைய மகள் பொற்கொடி அடுத்த 31-ஆம் தேதி இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது பொற்கொடி வீட்டில் இல்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பொற்கொடியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து மாது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பொற்கொடியை தீவிரமாக தேடி வருகின்றனர்.