தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூக்காரெட்டிப்பட்டியில் கமலா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கமலாவின் தங்கை சின்ன தங்கம் உயிரிழந்தார். இதனால் சின்ன தங்கத்தின் வீட்டை கமலா பராமரித்து வந்துள்ளார். கடந்த 31-ஆம் தேதி மாணிக்கம் என்பவரது மகன் சங்கர் மற்றும் அடையாளம் தெரியாத 3 பேர் சின்ன தங்கத்தின் வீட்டிற்கு முன்பு இருந்த பழ மரங்கள், தகர சீட்டு, பாத்ரூம் கதவு ஆகியவற்றை சேதப்படுத்தி உள்ளனர்.

இதனை கமலா தட்டிக் கேட்டார். அப்போது அவர்கள் மண்வெட்டியால் கமலாவை தாக்கி இங்கு இருந்தால் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த கமலாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கர் உள்பட நான்கு பேர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.