தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு மத்திய அரசாங்கம் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதேபோன்று பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகம் வெளியான போது அதில் ஒருவர் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்தால் நாட்டில் வறுமை நீங்கும் என்று ஒரு வசனத்தை கூறி இருப்பார். இதன் முதல் பாகம் ரிலீஸ் ஆகி சில மாதங்களுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

இந்நிலையில் பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகம் வெளியான போது பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் பாகம் வெளியான நிலையிலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிச்சைக்காரன் படத்திற்கும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் பல்வேறு விதமான மீம்ஸ்களை போட்டு வருகிறார்கள். மேலும் சிலர் மூன்றாம் பாகம் வெளியானால் இன்னும் என்னென்ன நிகழுமோ என்றும் மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.