தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கீர்த்தி செட்டி. உப்பென்னா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான கீர்த்தி செட்டி முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இவர் நடிப்பில் அண்மையில் கஸ்டடி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் நடிகை கீர்த்தி செட்டி முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக இணையதளத்தில் சமீப காலமாக தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. இதனால் நடிகை கீர்த்தி செட்டியை நெட்டிசன்கள் பலரும் விமர்சிக்கிறார்கள்.

இதுகுறித்து தற்போது நடிகை கீர்த்தி செட்டி விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது மக்கள் எதற்காக எதிர்மறையான கருத்துக்களை இப்படி பரப்புகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக இணையதளங்களில் செய்திகள் வருகிறது. என் முதல் படத்தில் எப்படி இருந்தேனோ அப்படித்தான் இப்பவும் இருக்கிறேன். மேக்கப்பால் முகத்தில் சில மாற்றங்கள் ஏற்படத்தான் செய்யும். மேலும் வயது அதிகரிக்கும் போது உடலில் மாற்றங்கள் ஏற்படுவது என்பது இயல்புதான் என்று கூறியுள்ளார்.