தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வடிவுக்கரசி. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் வடிவுக்கரசி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை வடிவுக்கரசி சமீபத்திய பேட்டியில் தன் வாழ்வில் நடந்த துயரமான சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதாவது முதலில் ஆசிரியராக பணியாற்றிய வடிவுக்கரசி அதன் வருமானம் குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் அளவிற்கு காணவில்லை என்பதால் பிறகு ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்துள்ளார். அதன் பிறகு ஒரு மேனேஜ்மென்டில் கீப்பிங் வேலையும் செய்துள்ளார். வடிவுக்கரசியின் அப்பா மற்றும் சித்தப்பா எல்லோரும் திரை துறையில் இருந்த நிலையில் அதில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக ஒரே இரவில் நடுத்தெருவுக்கு வந்து விட்டார்கள். அந்த சமயத்தில் பேப்பரில் நடிப்பதற்கு விளம்பரம் வந்துள்ளது. ஆனால் வடிவுக்கரசிக்கு முதலில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதன் பிறகு அவருக்கு நடனம் மற்றும் காதல் சீன் போன்றவைகள் வராது என்பதால் அம்மா மற்றும் அக்கா வேடத்தில் நடித்து வந்துள்ளார். அப்போது வடிவுக்கரசியின் கணவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டதால் அவருடைய ஒரே மகளை அவரின் அம்மா வளர்த்து வந்துள்ளார். எந்த சூழ்நிலையிலும் யாரிடமும் கையேந்தி நிற்க கூடாது என்ற காரணத்திற்காக தன் கடின உழைப்பின் மூலம் தன் குடும்பத்தை பார்த்துக் கொண்டதாக வடிவுக்கரசி உருக்கமாக கூறியுள்ளார்.