நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், நீங்க கேட்டீங்க பாஜகவோடு தொடர்புல இருக்கீங்களா ? என்று…  தொடர்புல இருக்குன்னு சொல்லுறோம்.  தொடர்பில் உறுதியாக இருக்கிறோம். 3 மாதமாக நானும், TTVயும் தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறோம். கூட்டணி தொடர்பாக தேர்தல் நேரத்தில் முறையாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு முடிவு வர வேண்டும்.

பாஜக தேசிய தலைமையுடன் தொடர்பில்இருக்கின்றோம்  என சொல்லியாச்சு. அதற்குப் பிறகு  NDA கூட்டணி கூட்டத்தில் கூப்பிட்டார்களா ? இல்லையா என்று கேட்டு ஏன் சண்டையை மூட்டி விட்டுகிட்டே இருக்கீங்க ? எங்களால் கூட்டணி இல்லாமல் தனித்தும் செயல்பட முடியும்.  மீண்டும் NDA கூட்டணி தொடர்பு குறித்து கேள்வி எழுப்பிய உடனே தனது சட்டை பையில் இருந்த செல்போனை தூக்கி காண்பித்த ஓபிஎஸ்,

இந்த செல்லில் இருக்கின்றது. இன்றைக்கு தேதியில் வரைக்கும் இருக்கு. நாளைக்கு உங்கிட்ட பேசும்போது அந்த தேதியை காண்பிப்பேன் என தெரிவித்தார்.மழை காரணமாக புரட்சி பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்தில் நடத்த வேண்டும் என்று முடிவு பண்ணி பேசி வைத்துள்ளோம். மாவட்ட செயலாளர்கள்,  தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் முடிவு பண்ணி வைத்திருக்கிறோம் . தேதி அறிவிக்க இருக்கின்றோம்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கின்ற வாக்காளர்கள், வாக்கு சிதறாது.   எங்களுக்கு தான் விழும். தொண்டர்கள் எங்க பக்கம் தான் இருக்காங்க.

நாங்க முதல்ல இருந்து அதைத்தான் சொல்லிக்கிட்டே இருக்கிறோம்.  சேர்ந்தால்தான் ஜெயிக்க முடியும். ஒன்றாக சேர்ந்தால் தான் ஜெயிக்க முடியும் என்று நாங்களும் சொல்லிட்டு இருக்கிறோம். அவர் கிட்ட போய் கேளுங்க. பழனிச்சாமி கிட்ட போய் கேளுங்க. அவர் முடியாது, முடியாது  என்று சொல்லி, இதோடு பத்து தோல்வி ஆகிடுச்சு என தெரிவித்தார்.