விழுப்புரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பழனி பொறுப்பேற்றுக் கொண்டார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த மோகன் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராக தமிழக அரசால் பணியமர்த்தப்பட்டார். இதை அடுத்து விருத்தாச்சலத்தில் சார் ஆட்சியாராக பணியாற்றி வந்த பழனி விழுப்புரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் வளர்ச்சி திட்டங்கள், சுகாதாரத்துறை, கல்வித்துறை ஆகிய திட்டங்கள் வகுத்து மக்கள் கட்டமைப்புக்கான முதல் பணியை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். மேலும் 24 மணி நேரமும் மக்கள் குறைகளுக்காக தன்னை whatsapp எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறி 9444138000 என்ற எண்ணை அறிவித்தார்.