ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூரம்பட்டி நால்ரோட்டில் இருக்கும் ஹோட்டலில் தேதுராமன் என்பவர் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் 4 பேர் கொண்ட கும்பல் ஹோட்டலுக்கு வந்து சாப்பிட அமர்ந்தனர். அப்போது நேரம் முடிந்து விட்டதால் பார்சல் உணவு தான் வழங்க முடியும் என சேதுராமன் கூறியுள்ளார். இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த நான்கு பேரும் சேதுராமனை தாக்கினர்.

அதில் ஒருவர் தேங்காயை எடுத்து சேதுராமன் மீது வீசினார். இதனால் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சேதுராமனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் 4 பேரையும் தேடி வருகின்றனர். அந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.