அதிமுக மதுரை மாநாடு தொடங்குவதற்கு முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மருது அழகுராஜா, மான ரோஷம் உள்ள வீர மறவர்கள், என் அன்பு சகோதரர்கள் யாரும் மதுரை மாநாட்டிற்கு செல்ல வேண்டாம். அப்படி யாராலும் வற்புறுத்தி உங்களை அழைத்து,  இழுத்துச் சென்றால் ? எடப்பாடியின் முன்னாள் நின்று கொண்டு…  ஏனப்பா இந்த கட்சியை உடைத்தாய், உனக்கு கட்சி வாய்ப்பு கொடுத்தது.

நீ கட்சிக்கு செய்தது என்ன என்று கேளுங்கள் ? அந்த மதுரை மாநாட்டையே ஒரு ஆர்ப்பாட்ட களமாக நீங்கள் மாற்றுங்கள். அது நம் குடும்ப விழா தான். நம்ம குடும்பத்தில் எல்லாம் சேர்ந்து விழா நடத்துகிறபோது, அண்ணன் தம்பிக்குள்ள ஒரு பிரச்சனை இருந்தால்,  அண்ணன்,  தம்பி ஏம்பா இப்படி பண்ணுன்ன என கேக்க தான் செய்வான்.  அது கலவரம் அல்ல, அது போராட்டம் அல்ல. செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா,  உதயகுமார் என்று கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன். எடப்பாடிக்கு மதுரையில் மூன்று எட்டப்பன்.

இந்த மூன்று எட்டப்பனிலே ஒரு எட்டப்பனாவது தன்னுடைய  தொகுதியினுடைய சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு,  ஒரு இடைத்தேர்தலை  சந்தித்து, நீங்கள் வெற்றி பெற்று காட்டி விடுங்கள். நீங்கள் வெற்றி பெற்றதாக நாங்கள் ஒப்புக்கொள்கின்றோம். அந்த துணிச்சல் இருக்கிறதா ?  இதுதான் நாங்கள் வைக்கின்ற சவால். எனவே அனைத்து நிலைகளிலும்,  எடப்பாடியின் முகத்திரை கிழிக்கப்பட்டு வருகிறது தொண்டர்களும், பொதுமக்களும் புரிந்து கொண்டு விட்டார்கள் என தெரிவித்தார்.

குறிப்பாக அதிமுக மாநாடு வெற்றிகரமாக நடந்த பின்பும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.