சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் நிவாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் நிவாஸ் எருமபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலாஜி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிவாஸின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நிவாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த பாலாஜியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.