சேலம் மாவட்டத்தில் உள்ள குறிச்சி கிராமத்தில் செல்லமுத்து- ஜெகதாம்பாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது செல்லமுத்து கூறியதாவது, எங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தின் பெயரில் ஒருவரிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கினோம்.

இதனையடுத்து 60 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுத்த பிறகு அந்த நபர் நிலத்தை தர மறுக்கிறார். மேலும் அந்த நிலத்தை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. எனவே நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அவர்களை போலீசார் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுக்க அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.