திருச்சி மாவட்டத்தில் உள்ள வரகுப்பை கிராமத்தில் விவசாயியான சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் சின்னத்தம்பி தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அடிக்கடி திட்டியுள்ளார். நேற்று காலை சின்னதம்பி இந்திராணியை தகாத வார்த்தைகளால் திட்டி அரிவாளால் வெட்டினார்.

இதனால் படுகாயமடைந்த இந்திராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சின்ன தம்பியை கைது செய்தனர்.