சேலம் மாவட்டத்தில் உள்ள கன்னங்குறிச்சி சின்ன மாரியம்மன் கோவில் தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சபரி சேலத்தில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு மனநலம் பாதித்த 17 வயது சிறுமிக்கு சபரி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் போலீசார் சபரியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த சேலம் நீதிமன்றம் சபரிக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.