சேலம் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி அம்மன் கோவில் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் விரைந்து சென்று கிளினிக்கில் சோதனை நடத்தி ரவியிடம் விசாரித்தனர். அப்போது ரவி 9-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் போலி டாக்டரை கைது செய்தனர்.