திருச்சி மாவட்டத்தில் உள்ள நவல்பட்டு அண்ணா நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரர். செந்தில்குமார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 24-ஆம் தேதி செந்தில்குமார் குடும்பத்துடன் சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு செந்தில்குமார் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 3 1/2 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.