திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் மானூர் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்த போது 3 பேரும் பலஸ்தீனாபுரத்தை சேர்ந்த முத்துக்குமார், உத்தமராசா, சுப்பையா என்பது தெரியவந்தது. மூன்று பேரும் மதுபோதையில் இருந்துள்ளனர்.

அவர்கள் திடீரென போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி கற்களை எடுத்து காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து தப்பி ஓட முயன்ற 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது போலீஸ்காரர் முருகேசனின் கையில் கடித்துவிட்டு அவர்கள் தப்பி ஓடினர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த முத்துக்குமாரை கைது செய்தனர். மற்ற இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.