சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டையில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாத்தி என்ற மனைவி உள்ளார். இவர் ராயபுரத்தில் இருக்கும் தனியார் அச்சகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் மூலமாக வழக்கறிஞரான தட்சிணாமூர்த்தி என்பவர் அறிமுகம் ஆனார். இந்நிலையில் தட்சிணாமூர்த்தி ராஜாத்தியிடம் சென்னை தலைமை செயலகத்தில் துப்புரவு பணி வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

இதே போல் தட்சிணாமூர்த்தி நான்கு பெண்களிடம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். இதனால் ராஜாத்தி தட்சிணாமூர்த்தியை மடக்கிப் பிடித்து தண்டையார்பேட்டை போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமைச் செயலகத்தில் துப்புரவு வேலை வாங்கி தருவதாக கூறி தட்சிணாமூர்த்தி பெண்களிடம் தலா 50 ஆயிரம் ரூபாய் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.