காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏனாத்தூர் சமத்துவபுரம் பகுதியில் இருக்கும் பாட்டி வீட்டில் தம்பிதுரை என்பவர் தங்கி படித்து வந்துள்ளார். இவர் கீழம்பியில் இருக்கும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு பட்டப்படிப்பில் சேர்ந்தார். முதல் நாளான நேற்று முன்தினம் தம்பிதுரை கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் ஆர்வமுடன் சென்றார். இதனையடுத்து கல்லூரியில் செலுத்த வேண்டிய கல்வி கட்டணத்தை செலுத்தி விட்டு பிற்பகல் வீடு திரும்பினார்.

இந்நிலையில் கீழம்பி சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மினிலாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த தம்பிதுரையை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தம்பிதுரை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.