கரூர் மாவட்டத்திலுள்ள பாலமரக்கட்டம் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவம் நடைபெற்ற அன்று வெங்கடாபுரம் விநாயகர் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுப்பிரமணி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று சுப்பிரமணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.