தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவிலில் சங்கரநாராயண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பராமரிக்கப்படும் கோமதி யானையின் உடல் நலம் குறித்து நெல்லை வன கால்நடை மருத்துவர் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆய்வு நடத்தியுள்ளனர். இந்நிலையில் யானையின் உடல் வெப்பம், உயரம், எடை ஆகியவற்றை பரிசோதனை செய்தனர்.

இதனையடுத்து மத்திய அரசின் கீழ் இருக்கும் வனவிலங்கு ஆய்வகத்திற்கு அனுப்புவதற்காக யானையின் ரத்த மாதிரி மற்றும் செல்கள் சேகரிக்கப்பட்டது. யானை நலமுடன் இருப்பதாக பரிசோதனை செய்த வன கால்நடை மருத்துவர் மனோகரன் கூறியுள்ளார். இந்த ஆய்வின்போது புளியங்குடி வனச்சரக வனதர் மகேந்திரன், உதவி இயக்குனர் திருநாவுக்கரசு, கோவில் இணை ஆணையர் ஜான்சி ராணி, யானை பாகன்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.