திருநெல்வேலி மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மட்கும், மக்காத குப்பைகள் ராமாயன்பட்டி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு தீ விபத்து ஏற்படும்போது புகை மூட்டத்தால் சங்கரன்கோவில் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சிரமமும் ஏற்படும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் ஐந்து நாட்கள் போராடி அணைத்தனர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக விசாரிக்க மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து தீ விபத்து நடந்த சில நாட்களில் அந்த பகுதி மேஸ்திரி பெருமாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி பேட்டை பகுதி சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.