திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் பார்வதி நாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மாலை ஆதிபராசக்தி நகரில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபாட்டில் வாங்கிக் கொண்டு வெளியே வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் பார்வதி நாதனை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பார்வதி நாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று பார்வதி நாதனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.