தேனி மாவட்டத்தில் உள்ள சிலமலை கிராமத்தில் விவசாயியான மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு வாளியில் வெந்நீரை எடுத்துக் கொண்டு குளிப்பதற்காக வீட்டில் இருக்கும் குளியலறைக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மணி மீது வெந்நீர் கொட்டியதால் அவர் வலியில் அலறி துடித்தார்.

இதனை பார்த்த உறவினர்கள் மணியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.