ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிணிபாளையம் ஆதிதிராவிடர் குடியிருப்பில் சென்னியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் குருநாதன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் கருப்பசாமி(29) அதே பகுதியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பசாமி மது குடித்துவிட்டு அடிக்கடி தனது தாயுடன் தகராறு செய்து வந்தார். சில நேரம் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று விடுவார்.

இந்நிலையில் குடிப்பழக்கத்தை கைவிட முடியாமல் மன உளைச்சலில் இருந்து கருப்பசாமி நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கருப்பசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.