விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நல்லாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கடந்த 2014-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் எனது கணவர் உயிரிழந்தார். அவரது இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை உதவி தொகை கேட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் சென்றேன்.

அவர் எனக்கு பாலியல் தொந்தரவு அளித்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாக்யராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.