கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு சேலத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கு சொந்த வேலையை முடித்துவிட்டு மீண்டும் அவர் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சின்ன சேலம் ஆவின் பாலகம் எதிரே இருக்கும் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சரவணன் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.