ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலை ஓரங்களில் அங்கங்கே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து திடீரென ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் எதிரே இருக்கும் பள்ளத்தில் இறங்கியது. உடனே சுதாரித்துக் கொண்டு டிரைவர் வாகனத்தை நிறுத்தியதால் சிறிது நேரத்தில் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிரேன் மூலம் சாய்ந்து என்று சுற்றுலா பேருந்து மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பேருந்து…. சுதாரித்து கொண்ட ஓட்டுனர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.12 லட்சம் நிவாரணம்….!!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ் உப்பிலிக்குண்டு பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் நடந்த வெடி விபத்தில் சிக்கி குருசாமி (60), பெரியதுரை (25), கந்தசாமி (47) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல் நேற்று …
Read moreஅதிர்ச்சி…! லாரி மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!
கடலூர் மாவட்டத்தில் பட்டான் குப்பம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சச்சின், ஆகாஷ், ஹரி ஆகிய வாலிபர்கள் புதுச்சேரியில் உள்ள காரைக்காலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்து இன்று காலை பைக்கில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் 3…
Read more