ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலை ஓரங்களில் அங்கங்கே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து திடீரென ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் எதிரே இருக்கும் பள்ளத்தில் இறங்கியது. உடனே சுதாரித்துக் கொண்டு டிரைவர் வாகனத்தை நிறுத்தியதால் சிறிது நேரத்தில் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிரேன் மூலம் சாய்ந்து என்று சுற்றுலா பேருந்து மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.