கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொழிக்கரை கடல் பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டது. இதனால் கடற்கரை பகுதியில் மரத்தினால் ஆன 1 1/2 உயரமுள்ள அய்யனார் சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சிலையை மீட்டு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர். இதேபோல் இலங்கைவிளை கடல் பகுதியில் சிம்மவாகினி சிலை கண்டெடுக்கப்பட்டது. அதன் உயரம் 3 அடியாகும். அதனையும் அதிகாரிகள் மீட்டு அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர்.